பிக் பாஸ் சீசன் 3 யின் இரண்டாவது எலிமினேஷன் இன்று நடக்க உள்ளது. இதில் யார் வெளியேற்றப்பட போகிறார்கள் என்று ரசிகர்கள் பெரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதற்கிடையே, வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எவிக்ஷனை முன்கூட்டியே அதுவும், வித்தியாசமாக போட்டியாளரே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் நபரின் பெயரை கூறுவார் என்று கமல்ஹாசன் ட்விஸ்ட் வைத்தார். அதன்படி, சாண்டி கையில் எவிக்ஷன் கார்டு கொடுக்கப்பட்டது. அதில் இருந்த பெயர், நைனா என்று செல்லமாக அழைப்பெறும் மோகன் வைத்தியா. அதைப் பார்த்ததும், விளையாட்டில் அவுட்டான பச்சக்குழந்தை போல் மோகன் வைத்தியா தேம்பி தேம்பி அழுதுக் கொண்டு அனைத்து போட்டியாளர்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டு விடைபெற தயாரானார்.
சில நிமிட சோகம், அழுகை, முத்தங்களுக்கு இடையே, கமல்ஹாசன் இது Prank என்றும், இந்த வார நாமினேஷனில் இருந்து மோகன் வைத்தியா காப்பாற்றப்படுகிறார் என்பதையும் கூறினார்.
மோகன் வைத்தியாவை தவிர மற்றவர்கள் எலிமினேஷன் ஆபத்தில் இருக்க, பிக் பாஸ் வீட்டில் அதிரடி காட்டி வரும் வனிதா தான் இன்று வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
போட்டியை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் வனிதா முக்கிய பங்கி வகித்தாலும், அவரை தெலுங்கான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த இருப்பது உள்ளிட்ட சில பிரச்சினைகளாலும் அவரை பிக் பாஸ் வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...