மணிரத்னத்தின் ‘இருவர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், தொடர்ந்து ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஜீன்ஸ்’, ‘ராவணன்’, ‘எந்திரன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர், 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சானை காதல் திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர், தற்போது முதல் முறையாக தெலுங்குப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் தமிழ்ப் படத்தில் மட்டுமே நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய், முதல் முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக தெலுங்குப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார். ’ராவோயி சண்டமாமா’ என்ற தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்த ஐஸ்வர்யா ராய், ஹீரோயினாக தெலுங்கு சினிமாவில் களம் இறங்குவது இதுவே முதல் முறை என்பதால், இப்போதே இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் பணிகள் முடிவடைந்த உடன், இந்த புதிய படத்தின் பணிகள் தொடங்க உள்ளதாம்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...