‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி, அப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். இதையடுத்து தெலுங்கு சினிமாவில் எண்ட்ரியாகி ஏகப்பட்ட வாய்ப்புகளைப் பெற்று வருபவர், தமிழிலும் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தாலும், கதை தேர்விலும், கதாபாத்திர தேர்விலும் சாய் பல்லவி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், முத்தக்காட்சி ஒன்றுக்காக முன்னணி நடிகருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை சாய் பல்லவி நிராகரித்திருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் ‘டியர் காம்ரேட்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவியை தான் முதலில் அனுகியிருக்கிறார்கள். ஆனால், படத்தில் முத்தக்காட்சி இருந்ததால் அதில் நடிக்க முடியாது, என்று கூறி அந்த வாய்ப்பையே சாய் பல்லவி நிராகரித்துவிட்டாராம்.
சாய் பல்லவி நிராகரித்த பிறகே ராஷ்மிகாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...