மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கண்டனம் தெரிவித்த நடிகர் சூர்யா, சமீபத்தில் நடைபெற்ற அகரம் பவுண்டேஷன் நிகழ்வில், இது குறித்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசுகையில், புதிய கல்வி முறையினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதோடு, ஏழை மாணவர்களின் உயர் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும், புதிய கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் குறித்து விரிவாக பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்வி முறையை அமல்படுத்த கூடாது என்றும் வலியுறுத்தினார். சூர்யாவின் இத்தகைய பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்ததோடு, புதிய கல்வி முறைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், சூர்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க ஐடி பிரிவு மாநில தலைஅர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், புதிய கல்வி முறை குறித்து சில விளக்கங்கள் அளித்தவர், சூர்யா கட்டியுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான 7 நட்சட்சத்திர ஓட்டல் போன்ற வீட்டுக்கு நிதி எங்கிருந்து வந்தது என்று சூர்யாவால் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனுக்காக பல வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்பட்டு, பிறகு அது மூடப்பட்டது ஏன்? உள்ளிட்ட பல கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...