பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது எலிமினேஷன் ரவுண்ட் தொடங்கியுள்ளதால், ஒவ்வொரு வாரமும் வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதோடு, அதிகாரப்பூர்வமாக வெளியேறபோகிறவர் குறித்து தெரிவதற்கு முன்பாக அவர் யார்? என்பதை தெரிந்துக் கொளவதிலும் ஆர்வமாக உள்ளார்கள்.
பிக் பாஸ் போட்டியின் முதலில் பாத்திமா பாபு அவரை தொடர்ந்து இரண்டாவதாக வனிதா என இருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது போட்டியில் இருந்து மூன்றாவது நபர் வெளியேற உள்ளார்.
இந்த வார எலிமினேஷன் பட்டியலில் மோகன் வைத்யா, மீரா மிதுன், அபிராமி, சரவணன், சேரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் யார் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுகிறார்கள், என்பதை பிக் பாஸ் இன்று அறிவிப்பார். நாளை யார் வெளியேறப்போவது என்பது தெரிய வரும்.
இந்த நிலையில், நாளை பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறும் மூன்றாவது நபர் மோகன் வைத்யா தான் என்று தகவல் கசிந்துள்ளது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...