Latest News :

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் போலீஸ்! - எதற்காக தெரியுமா?
Thursday July-25 2019

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக பிக் பாஸ் வீடு சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

 

இதற்கிடையே, போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மீரா மிதுன் மற்றும் வனிதா ஆகியோர் மீது போலீஸ் புகார் அளித்ததை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியது. குழந்தை கடத்தல் தொடர்பாக வனிதாவிடமும், மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி நடத்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மீரா மிதுனிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பிறகு, போட்டியில் இருந்து இருவரும் வெளியே வந்ததும் தீவிர விசாரணை நடத்துவதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு போலீசார் சென்று விட்டார்கள்.

 

இந்த நிலையில், இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போலீஸ் நுழைந்துள்ளது. காரணம், மீரா மிதுன் தான். மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாக கூறி மீரா மிதுன், பல பெண்களிடம் பணம் மோசடி செய்திருப்பதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக விசாரிக்க, இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் உள்ள பிக் பாஸ் வீட்டில், எழும்பூர் காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் நுழைந்தனர். அவர்கள் மீரா மிதுனிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

Meera Mithun

 

விசாரணைக்குப் பிறகு மீரா மிதுன் கைது செய்யப்பட கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

5321

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery