Latest News :

சிம்புவின் அடாவடித்தனம்! - அப்செட்டான தயாரிப்பாளர்!
Monday July-29 2019

சிம்புவை வைத்து படம் எடுப்பதும், அந்த படத்திற்கு பிறகு சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் திரையுலகில் இருப்பதும் அதிசியமான ஒன்றாகவே இருந்த நிலையில், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு சிம்புவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததால், அவரும் பிற நடிகர்களை போல தான், இனி அவரை வைத்து எந்தவித பயமும் இல்லாமல், படம் தயாரிக்கலாம் என்று நினைத்த தயார்பாளர்களின் எண்ணத்தில், சிம்பு பெரிய கல்லை போட்டிருக்கிறார்.

 

கெளதம் கார்த்திக்குடன் இணைந்து சிம்பு நடித்து வரும் படம் கன்னடத்தில் வெற்றிப் பெற்ற ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தை கன்னடத்தில் இயக்கிய நார்தனே தான் தமிழிலும் இயக்குகிறார்.

 

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு நிழல் உலக தாதாவாக நடிக்க, கெளதம் கார்த்திக் போலீஸாக நடிக்கிறார்.

 

கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, மழை, புயல், கடும் வெயில் என அனைத்து இயற்கை சீற்றங்களை கடந்தாலும், எந்தவித பாதிப்பும் இல்லாமல் படப்பிடிப்பு தொடர்ந்தது.

 

ஆனால், சிம்புவின் அடாவடித்தனத்தால் தற்போது படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருப்பதோடு, படம் முடியுமா? அல்லது அப்படியே டிராப்பாகிவிடுமா? என்ற அச்சத்தில் தயாரிப்பாளர் உள்ளதாக கூறப்படுகிறது.

 

படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, யாரிடமும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சிம்பு, பிறகு படப்பிடிப்பு குறித்து இதுவரை எதுவும் பேசவில்லையாம். ஏற்கனவே தனது நண்பர்களுடன் படப்பிடிப்பு வந்தவர்கள், அவர்களை தயாரிப்பாளர் செலவிலேயே நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து அடாவடி செய்தவர், தற்போது படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்து வருகிறாராம்.

 

படத்தை முடித்தால் போதும், என்ற எண்ணத்தில் சிம்புக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் தயாரிப்பாளர் அமைதியாக இருந்தாலும், சிம்புவின் இந்த அடாவடிதனத்தால் ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறாராம்.

Related News

5339

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery