100 நாட்களை கொண்ட பிக் பாஸ் போட்டி தற்போது 37 நாட்களை கடந்துவிட்டது. இதில் போட்டியாளர்களாக பங்கேற்ற 16 பேர்களில் நான்கு பேர் வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போதிருப்பவர்களில் மேலும் ஒருவர் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவர்.
பிக் பாஸ் வீட்டுக்குள் கொஞ்சம் ஓவராக நடிப்பவர்கள் மீது ரசிகர்கள் வெறுப்பை காட்டுவதால், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதில் பிக் பாஸ் தீவிரம் காட்டி வருகிறார். அதனால் தான், வனிதா, மீரா மிதுன் போன்றவர்கள் வெளியேற்றபட்டார்கள்.
இதற்கிடையே, வைல்ட் கார்டு ரவுண்ட் மூலம் புதிய போட்டியாளர் ஒருவர் விரைவில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழை உள்ளார். அவர் யார்? என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், அந்த போட்டியாளர் தேர்வில் சேனல் நிர்வாகமும் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது சேனல் சார்பாக நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் ஒருவர் விரைவில் வைல்ட் கார்டு ரவுண்ட் மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார், என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் தொடங்கிய தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3-யில் வைல்ட் கார்டு மூலம் புதிய போட்டியாளராக திருநங்கை தமன்னா சிம்ஹாரத்திரி என்பவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டிருக்கும் திருநங்கை தமன்னா, நடிகர் பவன் கல்யாண் கட்சியின் சார்பாக சமீபத்தில் தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...