கோலிவுட்டின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான அதர்வா முரளி, கமர்ஷியல் படமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ’பூமராங்’ படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குநர் கண்ணனுடன் கைகோர்த்திருக்கும் அதர்வாவுக்கு இப்படத்தில் ஜோடியாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவின் காதலி என்று சமீபகாலமாக கிசுகிசுக்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன், இப்படத்தின் ஹீரோயினாக நடிப்பது படத்தின் கூடுதல் சிறப்பாகும். இளம் ஜோடியான அதர்வா - அனுபமா பரமேஸ்வரன் இருவருக்குமிடையிலான கெமிஸ்ட்ரி நிச்சயம் ரசிகர்களை கவருவதோடு, ரொமாண்டிக் ரசிகர்களின் பேவரைட் படமாகவும் இப்படம் அமையும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ளது. பிறகு சில முக்கிய காட்சிகளுக்காக அதர்வா, அனுபமா உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாடு பறக்க உள்ளனர்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கும் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனத்துடன், எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ளது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...