பிக் பாஸ் சீசன் 3 யில் இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், இந்த வாரம் வெளியேறப் போகும் ஐந்தாவது போட்டியாளர் யார்? என்பதை தெரிந்துக் கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 3 யின் டைடில் வின்னராக வரப்போவது யார்? என்பது குறித்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட மீரா மிதுன் கூறியுள்ளார்.
வனிதாவுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக நகர்த்திய மீரா மிதுனை பிடிக்காதவர்கள் பலர் இருந்தாலும், அவர் செய்வதை ஏற்றுக்கொண்டு ரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர் வெளியேற்றப்பட்டது அந்த கூட்டத்திற்கு பேரதிர்ச்சியாகவும் அமைந்தது.
தற்போது ஊடங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் மீரா மிதுன், பிக் பாஸ் 3 யின் டைடிலை சாண்டி தான் வெல்வார் என்று கூறியிருக்கிறார். அதே சமயம், தர்ஷனுக்கும் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, ஆனால் அவருக்கு எது சரி, எது தவறு என புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாததால், அவர் பட்டத்தை வெல்வது கடினம் தான், என்று தெரிவித்திருக்கிறார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...