பிரபல நடிகையும், நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியுமான லலிதா குமாரியின் அண்ணன் அருண் என்பவரின் 17 வயது மகள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்ரினா என்ற அந்த பெண் சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளார். இதையடுத்து, மகள் காணாமல் போனது குறித்து அருண் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அவர் காணாமல் போய், இன்றுடன் 5 நாட்கள் ஆகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தார் பெரும் கவலையில் உள்ளனர்.
இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை லலிதா குமாரி, ”எனது அண்ணன் அருணின் மகள் அப்ரிதா காணமால் போய் 5 நாட்கள் ஆகின்றன. அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. காவல் துறையில் புகார் தெரிவித்ததன் பேரில் அவர்கள் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்கள். ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவள் படித்து வந்த சர்ச் பார்க் பள்ளியில் இதை பற்றி விசாரித்த போது பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், எங்களுக்கு சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கேமராக்கள் வேலை செய்யாததால் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. காவல் துறைக்கும் போதியிஅ ஆதாரங்கள் பள்ளி அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை. பள்ளி மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது.” என்று கண்ணீர் மல்க கூறினார்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...