பிரபல நடிகையும், நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியுமான லலிதா குமாரியின் அண்ணன் அருண் என்பவரின் 17 வயது மகள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்ரினா என்ற அந்த பெண் சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளார். இதையடுத்து, மகள் காணாமல் போனது குறித்து அருண் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அவர் காணாமல் போய், இன்றுடன் 5 நாட்கள் ஆகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தார் பெரும் கவலையில் உள்ளனர்.
இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை லலிதா குமாரி, ”எனது அண்ணன் அருணின் மகள் அப்ரிதா காணமால் போய் 5 நாட்கள் ஆகின்றன. அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. காவல் துறையில் புகார் தெரிவித்ததன் பேரில் அவர்கள் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்கள். ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவள் படித்து வந்த சர்ச் பார்க் பள்ளியில் இதை பற்றி விசாரித்த போது பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், எங்களுக்கு சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கேமராக்கள் வேலை செய்யாததால் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. காவல் துறைக்கும் போதியிஅ ஆதாரங்கள் பள்ளி அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை. பள்ளி மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது.” என்று கண்ணீர் மல்க கூறினார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...