Latest News :

’நேர்கொண்ட பார்வை’ படத்தை கைப்பற்றிய உதயநிதி!
Saturday August-03 2019

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், திமுக-வின் இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு முழு அரசியல்வாதியாகிவிட்டார். இதன் பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.

 

இதை நிரூபிக்கும் வகையில், அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனம் சில படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில், அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ரீமேக் படமான ‘நேர்கொண்ட பார்வை’ வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரத்தில் தொடர்ந்து இழுபறிகள் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது வியாபாரம் அனைத்தும் முடிவடைந்துவிட்டது.

 

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், சென்னை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிடுகிறது.

Related News

5375

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery