உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை வடபழனியில் நடைபெற்றது. திரைப்பட உதவி இயக்குநர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஜாதி தொடர்பாக இயக்குநர்கள் பா.ரஞ்சித் மற்றும் அமீர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டிவிட்டரில் பா.ரஞ்சித்துக்கு எஸ்.வி.சேகர் கூறுகையில், தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித். தன் ஜாதியைப் பெருமையாக சொல்லும் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும், என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ரஞ்சித், தலித் என்பது ஜாதியல்ல, ஆரியம்-ஜாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ரஞ்சித்துக்கு மேலும் பல ட்விட்கள் மூலம் பதில் அளித்த எஸ்.வி.சேகர், தம்பி, தலித் என்று சொன்னது நீங்கள் தான். ஆரியம் - ஜாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல், நடைமூறை சாத்தியமில்லா கருத்தியல். காலம் உணர்த்தும். வெற்றி வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள். என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார், என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...