அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார். போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ரிலீஸ் தேதியான ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னையில் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சிங்கப்பூரில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. அதாவது, இந்திய நேரப்படி நாளை (ஆகஸ்ட் 6) மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் நேர்கொண்ட பார்வை படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதாம். இதன் மூலம் நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் காட்சி சிங்கப்பூரில் திரையிடப்படுகிறது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...