தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த பிரபாஸ், ‘பாகுபலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகியுள்ளார். பாலிவுட்டில் பாகுபலி பெற்ற வெற்றியால், பிரபாஸின் படத்திற்கு அங்கே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, விரைவில் வெளியாக உள்ள பிரபாஸின் ‘சாஹோ’ பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ’சாஹோ’ படத்திற்காக பிரபாஸ் வாங்கிய சம்பளத்தை இதுவரை எந்த ஒரு இந்திய சினிமா நட்சத்திரமும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. முதலில், இப்படத்தின் லாபத்தில் ஒரு பங்கு அவருக்கு சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது சம்பளமாக ரூ.100 கோடி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் எந்தவித விளக்கமோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை. மேலும், பிரபாஸின் இந்த அசுர வளர்ச்சியை பார்த்து பாலிவுட் ஸ்டார்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் ’சாஹோ’, ஆங்கிலப் படம் ‘மிஸன் இம்பாசிபல்’ பாணியில் சாகசங்கள் நிறைந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...