நாடகம் மற்றும் திரைப்பட நடிகரான ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.
பத்ம சேஷாத்ரி பள்ளியின் நிர்வாகியான ராஜலட்சுமி பார்த்தசாரதி, சிறந்த எழுத்தாளர் ஆவார். அவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது.
இன்று மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜலட்சுமி, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள பாரத் கலாச்சாரில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச் சடங்கு நாளை மாலை 4 மணிக்கு பெசண்ட் நகர் மயானத்தில் நடைபெற இருப்பதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...