’களவாணி 2’ படம் ரிலீஸுக்கு பிறகு கோடம்பாக்கத்தில் பரவலாக அடிபடும் பெயர் ‘பப்ளிக் ஸ்டார்’. யார் இவர்?, என்பது குறித்து நாம் ஏற்கனவே டீட்டய்லாக செய்தி வெளியிட்டோம். நம்மை போல பல தளங்களும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் பற்றி அவ்வபோது செய்தி வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போதைய செய்தி பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் பற்றியது அல்ல, அவர் அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை பார்த்தது பற்றியது.
உலகம் முழுவதும் நேற்று வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அஜித் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். சினிமா பிரபலங்களும் படம் பார்த்து பாராட்டி வருகிறார்கள். அஜித்தின் வித்தியாசமான நடிப்பில், உருவாகியுள்ள இப்படத்தை ‘களவாணி 2’ வில்லன் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், முதல் நாள், முதல் காட்சி, ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கிறார். ’
இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ”மற்றவர்களுக்கு எப்படி அஜித்தை பிடிக்குமோ அதுபோல் எனக்கும் அவரை பிடிக்கும். அவரை மட்டும் அல்ல, ரஜினி, கமல், விஜய், சூர்யா என்று அனைத்து ஹீரோக்களின் படங்களையும் நான் முதல் நாளே பார்த்துவிடுவேன். அப்படி தான் அஜித் சார் படத்தையும் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தேன்.
அஜித் சார், இதுவரை நடித்த படங்களில் ரொம்பவே வித்தியாசமான முயற்சி. அவர் நீதிமன்ற காட்சிகளில் நடித்தது இயல்பாக இருக்கிறது. நிச்சயம் அவரது நடிப்புக்கு விருது கிடைக்கும். படம் இளைஞர்களிடம் மட்டும் இன்றி பெண்களிடமும் வரவேற்பு பெறும்.” என்றார்.
அஜித்தின் நீதிமன்ற காட்சிகள் குறித்து பாராட்டும் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...