பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யா பாலனுக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும், அவர் அனைத்தையும் நிராகரித்து வந்த நிலையில், தற்போது அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் போனி கபூருக்காக தான் அவர் இந்த வேடத்தில் நடித்தாராம்.
அதே சமயம், வித்யா பாலன் பல தமிழ்ப் படங்களில் வாய்ப்புகளை நிராகரித்தாலும், ஒரு காலத்தில் தமிழ் சினிமா அவரை நிராகரித்ததாம். அதை எண்ணி அவர் பல நாட்கள் வருத்தப்பட்டிருக்கிறாராம்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய வித்யா பாலன், மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தில் ஹீரோயினாக தேர்வு செய்து, மேக்கப் டெஸ்ட் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், என்னை நிராகரித்து விட்டார்கள். அதேபோல், ’மனசெல்லாம்’ படத்திலும் என்னை ஒப்பந்தம் செய்து பிறகு நீக்கிவிட்டார்கள். அது என் மனதே வெடித்துவிடுவது போலாகிவிட்டது.” என்று கூறியிருக்கிறார்.
அதே சமயம், ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...
இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே...