சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை என மூன்று தேசிய விருது பெற்ற இந்தி திரைப்படம் ‘அந்தாதுன்’ தமிழில் ரீமேக் ஆகிறது.
தேசிய விருது மட்டும் இன்றி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மெல்போர்ன் திரைப்பட விழாவிலும் பல விருதுகளை வென்ற இப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்தியா மற்றும் சீனாவில் வெளியாகி வசூல் சாதனை படைத்த இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
நடிகர் தியாகராஜன் இப்படத்தின் தமிழ் ரீமேக்கின் உரிமையை வாங்கியிருக்கிறார். ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரஷாந்த் நடிக்கிறார்.
’அந்தாதுன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், இயக்கிய ‘ஜானி கத்தார்’ என்ற திரைப்படத்தை ‘ஜானி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து பிரஷாந்த் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் குறித்து தியாகராஜன் கூறுகையில், “'அந்தாதுன்’ கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்”என்றார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு தேர்வு செய்யப்பட்டவுடன் படப்பிடிப்பை துவக்க தியாகராஜன் திட்டமிட்டுள்ளார்.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...