அஜித்தின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இனி வித்தியாசமான கதைக்களத்தில் தொடர்ந்து நடிக்க அஜித் முடிவு செய்திருக்கிறார். அடுத்ததாக அவர் இயக்குநர் வினோத்துடன் இணையும் படமும் அப்படிப்பட்ட கதைக்களம் என்றாலும், அஜித் ரசிகர்களுக்கு பிடித்த விஷயம் ஏராளம் என்றும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்புவை வைத்து ‘மாநாடு’ படத்தை எடுப்பதில் தீவிரம் காட்டினார். ஆனால், தற்போது அப்படம் இல்லை என்பது, அதனால் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதையும் நாடே அறியும்.
சிம்புவுக்கு பதில் மாநாடு படத்தில் நடிக்கப் போவது சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரது பெயர் அடிபட, யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் மாநாடு கதை அஜித்திடம் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வினோத் இயக்கத்தில் நடிக்கும் அஜித்தை சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு சந்தித்தாராம், அப்போது அஜித் மீண்டும் சேர்ந்து படம் பண்ணலாம், என்று கூற, அதற்கு வெங்கட் பிரபு அரசியல் கதை ஒன்று இருக்கிறது, என்று கூறியிருக்கிறார்.
ஆனால், அஜித்தோ அரசியல் கதை எல்லாம் வேண்டாம், வேறு எதாவது கதை சொல்லுங்க, அடுத்தப் படம் பண்ணலாம், என்று சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆக, அஜித்திடம் மாநாடு கதையை சொல்ல இயக்குநர் வெங்கட் பிரபு முயற்சித்திருக்கிறார். ஆனால், அதை அஜித் நாகரீகமாக தவிர்த்துவிட்டாலும், வெங்கட் பிரபுவுடன் அடுத்ததாக இணைவது உறுதியாகியுள்ளது.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...