’தேவ்’ படத்தை தொடர்ந்து ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி, தற்போது ’ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தெலுங்குப் படங்கள் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் கதாநாயகி ராஷ்மிகா, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றில், கார்த்தியின் புது படத்தின் தலைப்பு ‘சுல்தான்’ என்பதை தெரிவித்திருக்கிறார்.
படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாக ராஷ்மிகா படத்தின் தலைப்பை வெளியிட்டிருப்பது தயாரிப்பு தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...