பிக் பாஸ் முதல் சீசனில் எப்படி ஓவியா தற்கொலை செய்துகொள்ள முயன்றாரோ அதுபோல், தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் மதுமிதா தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக தகவல் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுமிதாவின் தற்கொலை முயற்சி உண்மை என்பதற்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் மதுமிதா கையில் கட்டுடன் இருக்கிறார். மேலும், திரையில் தோன்றும் சேரன், மதுமிதா செய்தது பெரிய தவறு என்றும் சொல்கிறார். இதனால், மதுமிதா தற்கொலைக்கு முயன்றது உறுதியாகியுள்ளது. மேலும், தற்கொலைக்கு முயன்ற மதுமிதா, இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், மதுமிதா தற்கொலைக்கான காரணம் பற்றி பிரபல நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சம்யுக்தா ஹெக்டே கூறியிருக்கிறார்.
கன்னட பிக் பாஸ் சீசன் 5-யில் போட்டியாளராக கலந்துக்கொண்ட சக்யுக்தா ஹெக்டே, பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், “பிக் பாஸ் போட்டி மிகவும் மோசமானது. நாம் எதை செய்ய கூடாது என்று நினைக்கிறோமோ அதை செய்ய தூண்டும். போட்டி ஸ்கிரிப்ட் இல்லை, இருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது” என்று தெரிவித்திருக்கிறார்.
இவர் கூறியதை வைத்து பார்த்தால் நல்ல மனநிலையில் இருப்பவர்களை கூட பிக் பாஸ் வீடு, வேறு மாதிரியாக மாற்றிவிடும் போலிருக்கிறது. மதுமிதாவின் தற்கொலைக்கும் அதுவே காரணமாகவும் இருக்கும், என்றும் பேச்சு அடிபடுகிறது.
பிக் பாஸ் வீடு மோசமானது என்று கூறிய சக்யுக்தா ஹெக்டே, சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...