பிக் பாஸில் இருந்து மதுமிதா வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான சம்பவமாக அமைந்திருக்கிறது. தமிழச்சி என்ற பெயரில் ஆரம்பத்தில் அதிரடி காட்டிய மதுமிதா, பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்டு அமைதியாக இருந்தாலும், வனிதாவின் கெடுபிடிக்கு ஈடுகொடுத்து அவர் காட்டிய அதிரடியால் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த நிலையில், இந்த வாரம் அபிராமி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார், என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், மதுமிதா தனது வேண்டாத வேலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயன்றதானலேயே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அதே சமயம், மதுமிதா இப்படி கையை அறுத்துக் கொண்டதற்கு காரணமே கவின் தான் என்றும் கூறப்படுகிறது.
காவிரி விவகாரத்தில் ஷெரீனுடன் மதுமிதா மல்லுக்கட்ட, இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட கவின், மதுமிதாவிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஷெரீனுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். மேலும், “தமிழச்சி என்று சொல்லி கொள்கின்ற நீயே தமிழ்நாட்டிற்கு உயிரை கொடு” என்று கூறியதோடு சில கெட்ட வார்த்தைகளாலும் மதுமிதாவை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மன உடைந்த மதுமிதா அருகில் இருந்த கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த கவின், எதுவும் நடக்காதது போல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றாராம்.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...