வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் அங்கிருக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசங்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மலையாளப் படத்தின் படப்பிடிப்புக்காக இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த 30 பேர் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கயாட்டம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வரும் மஞ்சு வாரியர், அப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் இமாச்சல பிரதேசத்தில் தங்கியிருக்கிறார். படக்குழுவினர் தங்கியிருக்கும் பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாம். மேலும், அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறதாம்.
சேட்டிலைட் தொலைபேசி மூலம் தனது சகோதரரிடம் பேசிய மஞ்சு வாரியர், தான் உள்ளிட்ட படக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதை தெரிவித்திருக்கிறார். மேலும், சில நிமிடங்களே அவரால் பேச முடிந்ததாகவும், அதற்குள் தொலைபேசி துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், மஞ்சு வாரியரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மஞ்சுவின் சகோதரர், மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு தகவல் கொடுக்க, அவர் இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு தெரிவித்திருக்கிறார். தற்போது மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியார் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருவதோடு, தனுஷின் ‘அசுரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...