முன்னாள் முதல்வர்களும், நடிகர்களுமான மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ராமாராவ் ஆகியோருக்கு மேக்கப் மேனாக பணியாற்றிய பத்மநாபன் என்பவர் சாலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
85 வயதாகும் பத்மநாபன், பாலக்காட்டை அடுத்துள்ள ஒற்றபாலம் அம்பலபாறை புளியகுன்னு பகுதியில் வசித்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று, தனது நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி சாலை ஓரத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
அந்த வழியாக நடந்து சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், பத்மநாபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...