மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாட்டில் பலர் குரல் கொடுத்து வர, பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி, மாட்டுக் கறிக்கு ஆதரவாக பேசி பிரச்சினையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற சுரபி லட்சுமி, தனது பேஸ்புக் பக்கத்தில் வாழை இலையில் சாதம் பரிமாறி கறி விருந்து சாப்பிடுவதுபோல் புகைப்படம் வெளியிட்டிருந்தார். மேலும், கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு ஓட்டலில் கிடைக்கும் மாட்டிறைச்சி தனக்கு மிகவும் பிடித்த உணவு என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
சுரபியின் இந்த பதிவுக்கு லைக் போட்டது போல பலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். அதில் ஒருவர், “உங்கள் செலவில் நீங்கள் எந்த அழுக்கான செயலையும் செய்யலாம். அதை நாங்களும் பார்க்க வேண்டுமா?” என கூற, அவருக்கு அதிரடியாக பதளித்த சுரபி, “பசி என்பது அடிப்படை உணர்வு. நான் எப்போதெல்லாம் பசியாக இருக்கிறேனோ அப்போது நான் சாப்பிடப்போவது மாட்டு கறியா, கோழியா அல்லது பன்றிக்கறியா என்று கணக்கு பார்ப்பதில்லை. இந்த விவகாரம் நான் மாட்டு கறி சாப்பிட்டதால் வந்தது அல்ல. பண்டிகை நாளில் படம் வெளியானதால் வந்த பிரச்சினை என்று தெரிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...