பிக் பாஸ் மூன்றாவது சீசன் 70 நாட்களை கடந்து முக்கியமான கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. தற்போது, சேரன், லொஸ்லியா, தர்ஷன், முகேன், சாண்டி, வனிதா, ஷெரின் ஆகிய 7 பேர் வீட்டுக்குள் இருக்க, இந்த வாரம் கவின் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் இரு தினங்களில் தெரிந்து விடும். அதே சமயம், கவின் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டாலும், நேற்று முன் தினம் இந்த தகவலை பிக் பாஸ் வீட்டில் வைத்து சேரன் உறுதி செய்திருக்கிறார்.
வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இப்படத்தின் மூலம் தனது கம்பேக் ரொம்பவே ஸ்ட்ராங்காக இருக்கும், என்றும் சேரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், சேரன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்தில் லொஸ்லியா தான் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே, அவர் கவினின் காதலை ஏற்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வாரம் கவின் வெளியேறிவிட்டால், லொஸ்லியாவுக்கு காதல் பிரச்சினை இருக்காது என்றும், நிகழ்ச்சி முடிந்த உடன் அவர் எந்தவித கமிட்மெண்டும் இல்லாமல் சினிமாவில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கப் போவது பிக் பாஸ் வீட்டில் கூறிய சேரன், லொஸ்லியாவை ஹீரோயினாக நடிக்க வைக்கப் போவதையும் இதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே அறிவிப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...