பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியிருக்கும் தவசிராஜ், தென்னிந்திய சண்டை இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் துணை தலைவராக பதவி வகித்து வந்தார். ஆனால், அவர் சரியாக பணியாற்றாததால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும், சங்கத்தின் தலைவரான சோமசுந்தரத்தை தாக்க முயன்றார், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று சங்க செயற்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தவசிராஜ் மீது எழுந்த புகார்கள் குறித்து பேசப்பட்ட போது அவர் திடீரென்று வெளியே சென்று பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியாகி, அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...