கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3-யின் 17 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற சரவணன், ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராகவும் திகழ்ந்தார். தனக்கு தோன்றியதை வெளிப்படையாக பேசிய சரவணன், கல்லூரி நாட்களில் பெண்களை உரசுவதற்காகவே பஸ்ஸில் சென்றேன், என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
பிறகு தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவர், பிக் பாஸ் வீட்டில் சேரனுடன் சண்டை போட, அதுவும் சர்ச்சையில் முடிந்தது. பல இயக்குநர்கள் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டார். அவர் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், பெண்கள் குறித்து அவர் பேசியதற்கு தண்டனையாக வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் கூறினார். ஆனால், அவர் வெளியேற்றப்பட்டதற்கு உண்மையான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதே சமயம், இயக்குநர் சேரனுக்காகவே சரவண் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிக் பாஸ் நடுவரான கமல்ஹாசன், இந்த விவகாரத்தில் சரவணனுக்காக எதுவும் பேசாமல் அவரை வெளியேற்றினார். இது சரவணனுக்கு பெரும் அவமானமானது.
இந்த நிலையில், தமிழக அரசு நடிகர் சரவணனுக்கு உயரிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது, தமிழக அரசு சார்பில் குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் தரமான மற்றும் சமூக பொறுப்புள்ள படங்களுக்கு ரூ.7 லட்சம் மாணியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் நடிகர் சரவணன் தமிழக அரசால் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, சரவணனுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...