சிம்புக்காக இங்கு பல தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். படம் கொடுப்பதற்காக அல்ல, கொடுத்த அட்வான்ஸை வட்டியுடன் திருப்பி கேட்பதற்காக. இது சிம்பு வாழ்க்கையில் பல முறை நடந்திருந்தாலும், இந்த முறை சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்துவிட்டதால், கடந்த முறை போல சிம்புவால் எஸ்கேப் ஆக முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
சிம்பு செய்த குறும்புத்தனத்தை பொருத்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர்களுக்கு, இனி பொருத்தால் வேலைக்கு ஆகாது, என்பதை ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது படத்தில் இருந்து அவரை நீக்கி மற்ற தயாரிப்பாளர்களுக்கு புரிய வைத்ததை தொடர்ந்து, அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தக்க இழப்பீடு பெற்றே தீருவோம், என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இதனால், தயாரிப்பாளர்களின் புகார்களோடு தயாரிப்பாளர் சங்கத்தினர் காத்துக்கொண்டிருக்க இந்த விஷயத்தை சிம்புவின் நண்பர்கள் அவர் காதில் போட்டுள்ளார்கள். இதனால், இம்மாதம் 5 ஆம் தேதி சென்னைக்கு ரிட்டர்ன் ஆக இருந்த சிம்பு, அதை 10 ஆம் தேதியாக மற்றி, தற்போது அதையும் மாற்றி 20 ஆம் தேதி வருவதாக தகவலை கசியவிட்டிருக்கிறார்.
ஆனால், அவர் 20 ஆம் தேதி வந்தாலும், இனி அவரால் படம் நடிக்க முடியாத அளவுக்கு அவர் மீது தயாரிப்பாளர்கள் பெரும் கோபத்தில் இருப்பதால், சிம்பு இனி தாய்லாந்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை, என்றும் பேச்சு அடிபடுகிறது.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...