விவேகம் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்தால் அஜித்துக்கு வலி அதிகமானதாகவும் அதனால், அவரது தோள் பட்டையில் அவசரமாக ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், சில மாதங்களுக்கு பிறகே தனது அடுத்த படத்தில் வேலையில் அவர் ஈடுபட உள்ளதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், அஜித்துக்கு மீண்டும் ஒரு ஆபரேஷ செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஆபரேஷனுக்கு பிறகு குறைந்தது 5 மாதங்களாவது அஜித் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களாம். இதனால், அஜித் தனது அடுத்த படம் குறித்டு அடுத்த வருடமே முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், தற்போது வைரலாக பரவி வருகிறது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...