Latest News :

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் பிணம்! - போலீஸ் விசாரணை
Saturday September-21 2019

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜூனாவுக்கு, தெலுங்கானா மாநிலம் பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த இடம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்தது.

 

இதற்கிடையே நாகர்ஜுனாவின் மனைவி நடிகை அம்லா, சில வாரங்களுக்கு முன்பு அந்த இடத்தை பார்வையிட்டு, அதில் விவசாய வேலைகளை தொடங்கினார். பண்ணையாட்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஷெட் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. போலீசார் சென்று பார்த்த போது, அந்த ஷெட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது.

 

Nagarjuna Land

 

அந்த பிணத்தை கைப்பற்றி போலீசார் பிரேதப் பரிசோத்னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த நபர் இறந்து 6 மாதத்துக்கு மேல் இருக்கலாம், என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கும் போலீசார், நாகர்ஜுனாவின் குடும்படத்தாரிடமும் விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

5646

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

Recent Gallery