சூர்யா - இயக்குநர் கே.வி.ஆனந்த் கூட்டணியின் 3வது படமாக வெளியாகியிருக்கும் ‘காப்பான்’ கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது நடக்கும் சர்வதேச அரசியலைப் பற்றி படம் பேசியிருந்தாலும், அதை சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியான ‘காப்பான்’ தற்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், தற்போது சூர்யா ரசிகர்களையும் ஒரு தகவல் உற்சாகப்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் வெளியாகியுள்ள ‘காப்பான்’ ஐக்கிய அரபு அமீரகத்திலும் கடந்த 20 ஆம் தேதி வெளியானது. அங்கு வெளியான முதல் நாளில் ரூ.2.2 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படங்களின் பட்டியலில் ‘காப்பான்’ முதலிடத்தையும் பெற்றிருக்கிறதாம்.
இதற்கு முன்பு ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் தான் ரூ.2.1 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்த நிலையில், அதை சூர்யாவின் ‘காப்பான்’ முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...