Latest News :

ரசிகர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கும் விஷால் - எதற்கு தெரியுமா?
Wednesday September-13 2017

திருட்டு விசிடி மற்றும் இணையத்தில் சட்டவிரோதமாக புதுப்படங்களை பதிவேற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக விஷால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று சென்னை திருவல்லிக்கேணி போலீசார், இண்டர்நெட்டில் புதுப்படங்களை பதிவேற்றும் செய்யும் நபர் ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘துப்பறிவாளன்’ நாளை (செப்.13) உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தை இண்டர்நெட்டில் வெளியாகமல் தடுப்பதற்காக விஷால் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

 

அதன்படி, தியேட்டர்களில் இருந்து செல்போனில் படத்தை படம்பிடித்து நெட்டில் பதிவேற்றுவதை தடுப்பதற்காகவும், அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து காவல் துறையினரிடம் ஒப்ப்டைப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் மூலம் விஷால் பறக்கும் படை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

 

இவர்கள் ஐந்து பேர் கொண்ட குழக்களாக தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளிலும் கண்காணிக்க உள்ளனர். இந்த பறக்கும் படையில் உள்ள விஷால் ரசிகர்களுக்கு பிரத்யேக பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாம்.


Related News

573

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

Recent Gallery