திருட்டு விசிடி மற்றும் இணையத்தில் சட்டவிரோதமாக புதுப்படங்களை பதிவேற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக விஷால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று சென்னை திருவல்லிக்கேணி போலீசார், இண்டர்நெட்டில் புதுப்படங்களை பதிவேற்றும் செய்யும் நபர் ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘துப்பறிவாளன்’ நாளை (செப்.13) உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தை இண்டர்நெட்டில் வெளியாகமல் தடுப்பதற்காக விஷால் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தியேட்டர்களில் இருந்து செல்போனில் படத்தை படம்பிடித்து நெட்டில் பதிவேற்றுவதை தடுப்பதற்காகவும், அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து காவல் துறையினரிடம் ஒப்ப்டைப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் மூலம் விஷால் பறக்கும் படை ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இவர்கள் ஐந்து பேர் கொண்ட குழக்களாக தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளிலும் கண்காணிக்க உள்ளனர். இந்த பறக்கும் படையில் உள்ள விஷால் ரசிகர்களுக்கு பிரத்யேக பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாம்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...