ரசிகர்களின் பேவரைட் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸின் மூன்றாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில், போட்டியாளர்களாக பங்கேற்றவர்களில் தர்ஷன், கவின், முகேன் மற்றும் சாண்டி ஆகியோர் பாய்ஸ் குரூப் என்ற பெயரோடு ஒன்றாகவே இருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகும் இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கிறார்கள்.
தற்போது, வெற்றியாளர் முகேன் தாய்லாந்து பறந்துவிட்ட நிலையில், தர்ஷன், சாண்டி, கவின் ஆகியோர் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவின் மட்டும் மிஸ்ஸிங். இது குறித்து சாண்டியிடம் கேட்டதற்கு கவின் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அவர் திரைப்படம் ஒன்றில் நடிப்பதாகவும், அதன் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருப்பதாகவும் சாண்டி கூறினார். ஆனால், உண்மை அது இல்லை என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, இலங்கை பெண் லொஸ்லியாவும், சாண்டியும் காதலித்து வந்தார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கிய நிலையில், லொஸ்லியா - கவின் காதலை பலர் கலாய்த்து வருகிறார்கள். ஆனால், தனது காதல் கலாய்க்கும் காதல் இல்லை, நிஜமான காதல் என்பதை கவின், இன்னும் சில நாட்களில் நிரூபிக்க போகிறாராம். அதாவது லொஸ்லியாவை பார்ப்பதற்காக தான் அவர் இலங்கை சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
பிக் பாஸுக்காக போட்ட நாடகம் அல்ல தனது காதல் என்பதை, லொஸ்லியாவின் பெற்றோரிடம் நேரடையாக சொல்வதற்காக தான் அவர் இலங்கை சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இதில், எது உண்மை என்பது கவின் சொன்னதற்கு பிறகு தான் தெரியும்.
ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...