டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த விஷால், போராட்டதிலும் பங்கேற்றதுடன், தனது அறக்கட்டளை மூலம் விவசாயிகள் சிலரது குழந்தைகளில் படிப்புக்கும் உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது தனது ‘துப்பறிவாளன்’ படத்தின் தியேட்டர் கலெக்ஷனில் இருந்து ஒரு தொகையை விவசாயிகளின் நலனுக்காக கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சுமார் 350 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் துப்பறிவாளன் வெளியாகியுள்ளது. இந்த தியேட்டர்களில் துப்பறிவாளன் எத்தனைக் காட்சிகள் நடைபெறுகிறதோ, அத்தனைக் காட்சிகளிலும் விற்கும் ஒவ்வொரு டிக்கெட்டின் வருமானத்தில் இருந்து விஷாலுக்கு போகும் பங்கில் இருந்து, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் என்று விவசாயிகளின் நலனுக்காக வழங்கப்பட உள்ளது.
விஷால் பிலிம் பேக்டரி மூலம் சொந்தமாக விஷால் தயாரித்துள்ள ‘துப்பறிவாளன்’ இன்று திரையிடப்பட்ட சிறப்பு காட்சிக்குப் பிறகு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...