தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி படத்தில் நடிப்பது மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையிலும் இயல்பானவராக இருப்பதாலேயே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார். அதே சமயம் தனது ரசிகர்களையும் இயல்பாக இருக்குமாறு வலியுறுத்தும் விஜய் சேதுபதி, தான் வரும்போது பட்டாசு வெடிப்பது, போஸ்டர் ஒட்டுவது என்ற பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் எந்த செயலையும் செய்யக் கூடாது, என்று தனது ஒவ்வொரு நிகழ்ச்சியில் கூறி வருகிறார்.
அதற்கு ஏற்றவாறு விஜய் சேதுபதியின் ரசிகர்களும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் வைக்க பணம் இல்லாமல் வட்டிக்கு பணம் வாங்க முயன்ற ஒரு விவாசயிக்கு பயிர் வைப்பதற்கான அனைத்து செலவுகளையும் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த நிலையில், வரும் ஜனவரி 16 ஆம் தேதி விஜய் சேதுபதியின் 41 வது பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவும், வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ரிலீஸை முன்னிட்டும் மேலும் பல விவசாய நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள், நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில், மணிமங்கலம் ஏறி கரசங்காலில் 41 ஆயிரம் பனை விதைகளை விதைத்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ’மே 17’ இயக்க தலைவர் திருமுருகன் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, விஜய் சேதுபதி ரசிகர்களுடன் இணைந்து பனை விதைகளை விதைத்தார்.
ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...