‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘ஜடா’. இப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
வட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் கனவுகளில் ஒன்றான கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் எடிட்டிங் செய்திருக்கிறார்.
வரும் டிசம்பம் 6 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து இயக்குநர் குமரன் கூறுகையில், “தமிழ் இளைஞர்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து மாறி வருகிறது. பலர் இந்திய அளவில் விளையாடக் கூடிய திறமை பெற்றவர்களாக இருந்தாலும், சில காரணங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். இந்த எதார்த்தமான உண்மையைக் கொண்டே இப்படத்தினை உருவாக்கியிருக்கிறோம். திறமையிருந்தும் புறக்கணிக்கப்படும் ஒரு இளைஞன், அதே விளையாட்டு சூதாட்டத்திற்குள் போய் அடுத்து என்னவாகிறான்? என்பதே கதை.
இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத 7's கால்பந்தாட்டத்தை காட்ட இருக்கிறோம். நிச்சயமாக இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். கதிர், யோகிபாபு காம்பினேசனில் படம் முழுக்க காமெடி பட்டாசாக இருக்கும்.” என்றார்.
சமீபத்தில் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து வெளியான விஜயின் ‘பிகில்’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் ‘ஜடா’ விளையாட்டை மையமாக வைத்து வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிக்கும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...