‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் இணைந்த மாதவன் - விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைகிறார்கள். ஆனால், இப்போது இணைவது படத்தில் நடிப்பதற்காக அல்ல, ஒரு படத்தின் புரோமோஷனுக்காக.
சதராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர், விவேக் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தை சர்ஜுன் கே.எம் இயக்குகிறார். சி.பி.கணேஷின் டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தர் அண்ணாமலை நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்கும் இப்படம் க்ரைம் திரைல்லர் ஜானர் படமாகும்.
இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதில், படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்திலும், நடிகர் விஜய் சேதுபதி தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிடுகிறார்கள்.
இப்போது புரிந்ததா ‘விக்ரம் வேதா’ கூட்டணி மீண்டும் இணைவதற்கு எதற்காக என்று!
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...