மலையாள நடிகை பாவனாவை கடத்தி கற்பழித்த வழக்கே முடியாத நிலையில், பிரபல மலையாள நடிகையை துப்பாக்கி முனையில் ஒருவர் மிரட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகர் ஜோஸ் - ரத்னபிரபா தம்பதியரின் மகள் பிரணிதி. இவர் கம்பீரம், 4 ஸ்டூடன்ஸ், குரு தேவா, வணக்கம் தலைவா, காற்று உள்ளவரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த நிலையில், கடந்த் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் தளசேரியில் அவரது தாத்தா வீட்டிற்கு வந்த போது, பிரணிதியின் மாமா சொத்து பிரச்சினையால், பிரணிதியை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடனே தளசேரி போலீஸ் ஸ்டேஷனில் தனது மாமா மீது புகார் அளித்த பிரணிதி, கடந்த சில தினங்களாகவே மாமா தன்னை மிரட்டி வந்ததாகவும், சமீபத்தில் தாத்த வீட்டிற்கு வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக, புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...