நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். நேற்று வெளியான இப்படம், தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’-யின் ரீமேக் ஆகும். முதலில் பாலா ‘வர்மா’ என்ற தலைப்பில் இயக்கிய இப்படம் சில காரணங்களுக்காக கைவிடப்பட்டு, பிறகு முதலில் இருந்து எடுக்கப்பட்டது.
இதையடுத்து, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசயா, இப்படத்தின் தலைப்பை ‘ஆதித்ய வர்மா’ என்று மாற்றி எடுத்தார். படம் முடிந்த பிறகும் ரிலீஸில் சில சிக்கல்களை சந்தித்த நிலையில், நேற்று படம் வெளியானது.
படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், துருவ் விக்ரமின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்ததோடு, முதல் படத்திலேயே அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய துருவ் விக்ரமை, பத்திரிகைகள் வெகுவாக பாராட்டி வருகின்றது.
இந்த நிலையில், படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.34 லட்சம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், முதல் நாளிலேயே ‘ஆதித்ய வர்மா’ தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்றை விட, இரண்டாம் நாளான இன்று படத்தின் வசூல் அதிகரித்திருப்பதாகவும், அனைத்து திரையரங்குகளிலும் ’ஆதித்ய வர்மா’ ஹவுஸ் புல்லாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், வசூல் இன்னும் அதிகரிக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால், முதல் படத்திலேயே நடிப்பு மூலம் பாராட்டுப் பெற்ற துருவ் விக்ரம், வசூலிலும் பல சாதனைகளை படைப்பார் என்று தியேட்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...
உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...
ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி...