Latest News :

நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’!
Tuesday November-26 2019

‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘பார்த்தேன் ரசித்தேன், ‘ஜெமினி’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய சரண், சிறு இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’. இதில் பிக் பாஸ் டைடில் வின்னர் ஆரவ் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக காவ்யா தபார் நடித்திருக்கிறார்.

 

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இது குறித்து அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

இப்படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் மோகன் பேசுகையில், “தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, இயக்குநர் சரண் வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மகிழச்சியடைகிறேன். உண்மையில் சொல்லப்போனால், தற்கால ரசிகர்களின் ரசனைக்கேற்ற பொழுதுபோக்குப் படத்தை தனது பாணியிலிருந்து விலகாமல், மேம்பட்ட வடிவில் கொடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை ரசிகர்கள் இப்படத்தை வெகுவாக ரசிப்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் சரண் பேசுகையில், “நான் இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்தாலும், தயாரிப்பாளராக மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறேன். சினிமாவில் நான் நன்றாக இருக்கும் போது என்னுடன் இருந்தவர்கள், நான் கஷ்ட்டப்படும் போது இல்லை. இந்த படத்தை தயாரித்திருக்கும் சுரபி பிலிம்ஸ் மோகன் சார் என் நீண்ட நாள் நண்பர். அவர் நீண்ட நாட்களாக என் இயக்கத்தில் படம் தயாரிக்க வேண்டும், என்று கூறிக்கொண்டிருப்பார். அப்போது தான் எனக்கு ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ கதை தோன்றியவுடன் அதற்கு திரைக்கதை அமைத்து, அவரிடம் சொன்னேன், அவர் உடனே படம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டார்.

 

ஆரவை பார்க்குமாறு அவர் தான் சொன்னார். எனக்கு ஒருவரை பார்த்தால் ஸ்பார்க் தோன்றும். இவர்கள் நன்றாக வருவார்கள், இவர்கள் நம் கதைக்கு சூட்டாவர்கள் என்று தோன்றும். அந்த ஸ்பார்க் ஆரவை பார்த்ததும் தோன்றியது. அதன்படி அவரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தேன். படப்பிடிப்பு தொடங்கி இரண்டாவது நாளிலேயே என் நம்பிக்கை வீண் போகாதபடி ஆரவ், நடித்தார். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

 

இதில் நடிகை ராதிகா முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறே. அதேபோல் நிகிஷா படேலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கண் என்னை மிகவும் கவர்ந்தது. அதற்காகவே அவரது காட்சிகளை அதிகப்படுத்தினே. சாம்ஸின் காமெடி மிகப்பெரிய வரவேற்பு பெறும். இப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரக்கூடிய அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இருக்கும்.” என்றார்.

 

நடிகர் ஆரவ் பேசுகியில், “முதல் படமே சரண் சார் போன்ற ஒரு இயக்குநருடன் பணிபரிபுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. தாதா உடம்புக்குள் பயந்த சுபாவம் கொண்ட டாக்டர் ஆவி ஒன்று புகுந்துக் கொள்ள, அதன் பிறகு என்ன நடக்கிறது, என்பது தான் கதை. கதையை வெளிப்படையாக சொல்ல நாங்கள் பயப்படவில்லை. காரணம், கதையை தாண்டி, படத்தை பல சர்பிரைஸ்களுடன் இயக்குநர் சரண் சார் கொடுத்திருக்கிறார்.” என்றார்.

Related News

5920

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் தான் ‘அப்பு’ படம் உருவாக தூண்டுதலாக இருந்தார்கள் - இயக்குநர் வசீகரன் பாலாஜி
Wednesday October-02 2024

ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...

Recent Gallery