‘காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் மல்டி ஆர்டிஸ்ட் படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படம் குறித்து கடந்த ஒரு மாதமாக பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்று இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னம் தயாரித்து இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
பிரம்மாண்டமான முறையில் தயாராக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...