சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் காலதாமதமாக திருமணம் செய்துக் கொண்டாலும், பல தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சில தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கு பிரபல நடிகை திருமணமாகி ஒரு வருடம் முழுவதுமாக முடிவதற்குள் தனது கணவரை விவாகரத்து செய்யும் முயறிசியில் இறங்கியுள்ளார்.
’ரா ரா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்வேதா பாசு. இப்படத்தை தொடர்ந்து கருணாஸின் ‘சந்தமாமா’, ’ஒரு முத்தம் ஒரு யுத்தம்’, ‘மை’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர், இந்தி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வந்ததோடு, தெலுங்கு, பெங்காலி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.
’மக்தி’ என்ற இந்தி படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றிருக்கும் ஸ்வேதா பாசு, கடந்த வருடம் டிசம்பர் 13ம் தேதி தனது நீண்டநாள் காதலரான ரோஹித் மிடால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த ஸ்வேதா பாசு, திருமணமாகி ஒருவருடம் முடியாத நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக நிஜமான கணவன் மனைவி தம்பதி, சதா நாடார் - மோனிகா செலினா கதையின் நாயகன், நாயகியாக நடித்திருப்பதோடு, இருவரும் இணைந்து இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘இ தகா சைஆ’...
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது மகன் திருமணத்தை இதுவரை உலகம் கண்டிராத வகையில் பிரமாண்டமாக நடத்தினார்...
ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...