அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது தயாரிப்பாகும். எனவே, இப்படத்தை அதிகமான பொருட்ச் செலவில் மிக பிரம்மாண்டமாக அந்நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியீடு குறித்த் பல தகவல்கள் தினசரி வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், டீசர் எப்போது வெளியிடப்படும் என்பதை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ள ‘மெர்சல்’ படத்தின் டீசர் செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இத்தகவலை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...