Latest News :

பாவனா கற்பழிப்பு வழக்கு - முன் ஜாமீன் கேட்கும் காவ்யா மாதவன்!
Saturday September-16 2017

பிரபல நடிகை பாவனா கடத்தி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள பிரபல மலையாள நடிகர் திலீப், அம்மாநில ஆலுவா துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப் தாக்கல் செய்த பல ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வருவதால் அவர் கடந்த இரண்டு மாதங்களாக சிறையில் இருக்கிறார்.

 

இதற்கிடையே, பாவனா வழக்கில் திலீப்பின் நெருங்கிய உரவினர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இதே வழக்கில் திலீபின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதால் அவரும் கைது செய்யப்படுவார், என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், விசாரணையில் போலீசாரிடம் காவ்யா மாதவன் பெயரை கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து காவ்யா மாதவன் கைதாவது உறுதியாகியுள்ள நிலையில், கைதில் இருந்து தப்பிக்க காவ்யா மாதவன், கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த மனு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

611

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘தருணம்’! - ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது
Wednesday January-29 2025

சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  "தருணம்"  திரைப்படம், வரும்  ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான  திரையரங்குகளில் உலகமெங்கும்  வெளியாகிறது...

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Wednesday January-29 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...

Recent Gallery