பிரபல நடிகை பாவனா கடத்தி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள பிரபல மலையாள நடிகர் திலீப், அம்மாநில ஆலுவா துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப் தாக்கல் செய்த பல ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வருவதால் அவர் கடந்த இரண்டு மாதங்களாக சிறையில் இருக்கிறார்.
இதற்கிடையே, பாவனா வழக்கில் திலீப்பின் நெருங்கிய உரவினர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இதே வழக்கில் திலீபின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதால் அவரும் கைது செய்யப்படுவார், என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், விசாரணையில் போலீசாரிடம் காவ்யா மாதவன் பெயரை கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து காவ்யா மாதவன் கைதாவது உறுதியாகியுள்ள நிலையில், கைதில் இருந்து தப்பிக்க காவ்யா மாதவன், கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘குணா’ திரைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையரங்குகளில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியிட இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
தெலுங்கு திரையுலகின் முன்னணி மாஸ் நாயகனான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்ன்யா தேஜா நாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது...
’சூர்யாஸ் சாட்டர்டே’ திரைப்படத்தை தொடர்ந்து நானி நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹிட் : கேஸ் 3’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...