மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வழக்கத்தை விட அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பத்திரிகைகளின் பாராட்டோடு ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் ‘துப்பறிவாளன்’ அமைந்திருப்பதால், வசூல் ரீதியாக படத்தின் தயாரிப்பாளர் விஷாலுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும், திரையரங்கம் மற்றும் விநியோகஸ்தர்களும் இப்படத்தால் லாபம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘துப்பறிவாளன்’ வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் மற்றும் தனது நண்பர்களுக்கு நேற்று முன் தினம் விஷால் பெரிய அளவில் பார்ட்டி ஒன்று கொடுத்தாராம். நேற்று முன் தினம் இரவு ஆரம்பித்த பார்ட்டி மறுநாள் விடிய விடிய சென்றதாம்.
பார்ட்டியில் ரொம்ப சந்தோஷமாக இருந்த விஷால், ஏற்கனவே அறிவித்தது போல ‘துப்பறிவாளன் 2’ பாகத்தில் நடிப்பது உறுதி, கதையை ரெடி பண்ணுங்க என்று இயக்குநர் மிஷ்கினிடம் கூறியுள்ளாராம்.
கமல்ஹாசன் நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘குணா’ திரைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையரங்குகளில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியிட இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
தெலுங்கு திரையுலகின் முன்னணி மாஸ் நாயகனான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்ன்யா தேஜா நாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது...
’சூர்யாஸ் சாட்டர்டே’ திரைப்படத்தை தொடர்ந்து நானி நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹிட் : கேஸ் 3’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...