விஷாலின் வித்தியாசமான நடிப்பில், மிஷ்கினின் இயக்கத்தில் கடந்த வியாழக்கிழமை வெளியான ‘துப்பறிவாளன்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
மிஷ்கின் ஸ்டலில் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் டிடெக்டிவ் படமான இப்படம் தமிழகம் மட்டும் இன்றி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், ‘துப்பறிவாளன் 2’-வில் மீண்டும் மிஷ்கினுடன் இணைவேன் என்று விஷால் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ‘துப்பறிவாளன்’ படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், விஷால் மற்றும் இயக்குநர் மிஷ்கினை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் ஷங்கர் , “துப்பறிவாளன் இயக்குநர் மிஷ்கினின் தனித்துவமான ஸ்டைலில் உருவான மிகச்சிறந்த திர்ல்லர் திரைப்படம். விஷாலின் கதாபாத்திரம் மற்றும் அவருடைய நடிப்பு நன்றாக இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...