Latest News :

இசை நிகழ்ச்சியால் வந்த சர்ச்சை - ஏ.ஆர்.ரஹ்மான் புது முடிவு!
Monday September-18 2017

திரைப்படங்களுக்கு இசையமைப்பதுடன், வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்திவலும் ஏ.ஆர்.ரஹ்மான் தீவிரம் காட்டி வருகிறார். 

 

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் ரஹ்மான், லண்டனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் இந்தி பாடல்களை விட தமிழ் பாடல்கள் அதிகமாக இடம்பெற்றதால், இந்தி பேசும் ரசிகர்கள் அதிருப்தியுற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்கள். மேலும், தங்களுடைய அதிருப்தியை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்கள்.

 

இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டதால், ஏ.ஆர்.ரஹ்மான் பெரும் கவலை அடைந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே, இனி இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளில் தமிழ் மற்றும் இந்தி பாடல்களை ஒன்றாக பாடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ள ரஹ்மான், அக்டோபர் மாதம் கனடாவில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இது தொடர்பாக புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

 

அதாவது, கனடாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியை இரண்டாக பிரித்துள்ளார். ஒன்றில் தமிழ் பாடல்களும், மற்றொன்றில் இந்தி பாடல்களும் பாடப்போவதாக தெரிவித்துள்ள ரஹ்மான், இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

632

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery