இயக்குநர் விஜயை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகை அமலா பால், திருமணமாகி ஒராண்டு முழுவதுமாக முடிவதுக்குள், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்வதாக தகவல் கசிந்து, ஒரு சில மாதங்களில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு வந்துவிட்டார்.
சொத்து வேண்டாம், ஜீவனாம்சம் வேண்டாம், விவாகரத்தே போதும், என்ற உடன்படிக்கையோடு, இயக்குநர் விஜயும், அமலா பாலும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து பிஸியான அமலா பால், நடிகர் ஒருவரது கட்டுப்பாட்டில் இருப்பதாக கிசிகிசுக்கப்பட நிலையில், முதல் திருமணம் கசந்ததால், தான் திருமணத்தை வெறுக்கவில்லை என்றும், நேரம் வரும் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன், என்றும் அமலா பால் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஒருவரை அமலா பால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த தயாரிப்பாளர் திருமணமாகி விவாகரத்து பெற்றதோடு, அவருக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்களாம். திருமணத்திற்கு பிறகு அந்த குழந்தைகளும் அமலா பாலுடன் தான் வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...